வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் 16ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இரவு சைக்கிளொன்றில் சென்றுகொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியே இவ்விபத்து ஏற்பட்டதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக பொலிஸார்மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.