பணம் இல்லாமல் ஒருவேளை சாப்பாடு சாப்பிட்டு கஷ்டப்பட்ட இளம் சீரியல் நடிகை!!

2539

பிரியங்கா நல்காரி..

சன் தொலைக்காட்சி என்றாலே முதலில் பிரபலம் சீரியல்கள் தான். பின் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படங்கள்.

அப்படி அந்த தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் என்றால் ரோஜா தான். இதில் நாயகியாக பிரியங்கா நல்காரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் ஒரு பேட்டியில், தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றி பேசியுள்ளார்.

அப்போது அவர், அப்பாவுக்கு விபத்து ஏற்பட்ட சமயத்தில் எங்களிடம் பணம் இல்லை. ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் ஐந்து பேர் வசித்தோம். ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்த நாட்களும் உண்டு.

என் பள்ளி படிப்புக்கு பணம் இல்லாமல் துரத்தப்பட்டேன். பிறகு அதனால் படிப்பையும் பாதியில் நிறுத்தினேன் என கண் கலங்கி பேசியுள்ளார்.