மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று : ஆடைத் தொழிற்சாலையில் 708 பேருக்கு தொற்று உறுதி!!

830


கொரோனா தொற்று..



மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



திவுலப்பிட்டியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் பணியாற்றிய தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவாங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த மேலும் 139 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.


இந்த நிலையில் இன்று மாத்திரம் 605 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது