வவுனியா நெடுங்கேணியில் மேலும் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி : தொற்றாளர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!!

1224


கொரொனா..



வவுனியா வடக்கு நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக பிசீஆர் பரிசோதனை மேற்கொண்ட போது 3 பேர் கொரொனா தொற்றாளர்களாக அஅடையாளங் காணப்பட்டனர்.




இந் நிலையில் கடந்த செவ்வாய்கிழமை 27 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2 இருவர் அடையாளம் காணப்பட்டு இருந்த நிலையில் வியாழக்கிழமை மேலும் 83 பேரிடம் சோதனை நடத்தப்பட்ட சோதனையில் வெளியாகி முடிவுகளில் 7 பேர் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன்,


இன்று அதன் மிகுதி முடிவுகள் வெளியாகின. அதில் ஒருவர் கொரொனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இவ்வகையில் வவுனியா வடக்கு வீதி அபிவிருத்தி பணியாளர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய பலரிடம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.