முதல் திருமண நாளை கொண்டாட தயாரான கணவன் : மனைவிக்காக காத்திருந்தவருக்கு வந்த அதிர்ச்சி செய்தி!!

962

அஞ்சு தேவ்..

இந்தியாவில் முதலாம் ஆண்டு திருமண நாளை கணவருடன் சேர்ந்து கொண்டாட சென்ற இளம்பெண் சாலை விபத்தில் உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் சுதீஷ். இவருக்கும் அஞ்சு தேவ் (26) என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் முதலாம் ஆண்டு திருமண நாள் வந்தது.

அஞ்சு சில மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் திருமண நாளை கொண்டாட கணவர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி திருமண நாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் சுதீஷ் செய்திருந்தார்.

இந்த நிலையில் அஞ்சு தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் காரில் கணவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த லொறி மீது மோதியது.

இதில் அஞ்சு இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்ற மூவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

நேரம் போய் கொண்டே இருந்த நிலையில் மனைவி ஏன் இன்னும் வரவில்லை என்ற யோசனையில் சுதீஷ் இருந்த போது அவருக்கு பொலிசார் போன் செய்தனர்.

போனில் அஞ்சு உயிரிழந்த செய்தியை சொன்ன போது சுதீஷ் அதிர்ச்சியில் உறைந்தார். இதையடுத்து அஞ்சுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.