கொழும்பு வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளிகளான தாயும் மகனும் தப்பியோட்டம்!!

747


கொரோனா..



கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களான தாயும் மகனும் தப்பியோடியுள்ளனர்.



நேற்று இரவு 9 .10 மணியளவில் இவர்கள் இருவரும் தப்பியோடியுள்ளதாக தெரியவந்துள்ளது. தப்பியோடிய தாயும் மகனும் ஏஹெலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.




குறித்த இருவரும் இலக்கம் 4 அறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். தப்பி சென்ற இருவரையும் பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.