வவுனியாவில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகள்!!

1159


சிவப்பு, மஞ்சள் கொடிகள்..



மாவீரர் வாரத்தை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது. நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக ஆர்ப்பாட்டம் மற்றும் நடைபயணமின்றி சிவப்பு,



மஞ்சள் கொடிகளை தனது வீட்டு வாசலில் பறக்கவிட்டு தனது உறவுகளுக்கான நினைவேந்தல் வாரத்தை செ.அரவிந்தன் என்பவர் ஆரம்பித்துள்ளார்.




தனது வீட்டு வாசலின் முன்பகுதியில் கம்பங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகளை பறக்க விட்டுள்ள அவர், தனக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையை மீறாத வகையில் இறந்த தனது உறவுகளை தான் நினைவு கூறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.