வவுனியாவில் பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபியில் நினைவேந்தல் அனுஸ்டிப்பு!!

1026


சுனாமி நினைவேந்தல்..



வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 16ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு சுனாமி நினைவுத்தூபி முன்பாக இன்று (26.12.2020) காலை 9.15மணிக்கு இடம்பெற்றது.



பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதான வளாகத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.




இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவு பேரூரைகளும் இடம்பெற்றது.


வவுனியா நகரசபையால் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்ட குறித்த நினைவுத் தூபி நகரசபைத் தலைவர் இ.கௌதமனால் திறந்து வைக்கப்பட்டதுடன் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றது.

நிகழ்வில் மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கு.திலீபன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிசோர், நகரசபை தவிசாளர் இ.கௌதமன், உபதவிசாளர் சு.குமாரசாமி,


முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரட்ன, நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர் ஆலய நிர்வாகனத்தினர், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.