வவுனியா நகரில் 55 பேருக்கு கொரோனா தொற்று : நகரின் முக்கிய பகுதிகள் திடீர் முடக்கம்!!

4723

நகரின் முக்கிய பகுதிகள் முடக்கம்..

வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து பட்டானிசூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து பட்டாணிசூர் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

இதேவேளை பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் உள்ள அனேகமான வியாபார நிலையங்களை நடாத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

அதனை கருத்தில் கொண்டு நேற்று காலை வவுனியா பசார் வீதியின் ஒரு பகுதி தர்மலிங்கம் வீதி, சந்தை வீதிகள் இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டு, அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் முதற்கட்டமாக பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் முடிவுகள் இன்று (08.01.2021) வெளியான நிலையில் 55 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன். இச் செய்தி வவுனியா மக்களை பீதியடைய வைத்துள்ளது.

இந்த நிலையில் வவுனியா நகரின் முக்கிய பகுதிகள் இராணுவம், பொலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் இணைந்து முடக்கியுள்ளனர். முடக்கப்பட்ட பகுதிக்குள் யாரும் உட்செல்லவோ வெளியே வரவோ அனுமதிக்கப்படவில்லை.