வவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

2331

கொரோனா..

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 272 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் இன்று (22.01) மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த நான்கு நபர்களும், தோணிக்கல் வீதியினை சேர்ந்த ஒருவரும், பஸார் வர்த்தக நிலைய ஊழியர்கள் எட்டு பேர் என 13 நபர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களுக்குள் 272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது