திடீரென மஞ்சள் நிறமாக மாறிய நபர் : மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்!!

1383


சீனாவில்..



சீனாவில் ஒருவரின் தோல் நிறம் திடீரென மஞ்சள் நிறமாக மாறியதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



Du என்று அழைக்கப்படும் அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் இரண்டு கட்டிகள் இருப்பதைக் கண்டறிந்தார்கள்.
அவற்றில் ஒன்று புற்றுநோய்க்கட்டி.




அந்த கட்டி அவரது கணையத்தில் இருந்ததால், அது அவரது பித்தநீர் வெளியேறுவதைத் தடுத்துக்கொண்டிருந்திருக்கிறது. ஆகவே, பித்தநீர் வெளியேறாததால்தான் அவரது உடல் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது.


தற்போது, மருத்துவர்கள் அந்த இரண்டு கட்டிகளையும் அகற்றியிருக்கிறார்கள். அந்த கட்டிகளுக்கு காரணம், Du 30 ஆண்டுகளுக்கும் மேலாக கு.டிகாரராக இருந்ததும், பு.கை.பி.டி.த்.ததும்தான்.

ஆகவே, தயவு செய்து ம.து.வை.யு.ம் பு.கைப்பி.டித்தலையும் நிறுத்துமாறு மருத்துவர்கள் Duவை கேட்டுக்கொண்டுள்ளார்கள். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், கட்டிகள் அகற்றப்பட்டதும் Duவின் தோல் நிறம் சாதாரணமாகிவிட்டது என்பதுதான்.