வவுனியாவில் பட்டப்பகலில் 9 இலட்சம் ரூபாய் கொள்ளை!!

2069

புளியங்குளம் பகுதியில்..

வவுனியா – புளியங்குளம் பகுதியில் நேற்றையதினம் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் கொ.ள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

நேற்றையதினம் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்காக ஒருதொகைப் பணத்துடன் நபர் ஒருவர் சென்றபொழுது அவரை புளியங்குளம் – முல்லைத்தீவு பிரதான வீதியில் வழிமறித்த குழுவினர் அ.ச்சுறுத்தி அவரிடமிருந்த 9 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொ.ள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக பா.திக்கப்பட்ட நபரால் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.