வவுனியாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்!!

1825

உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்..

கிறிஸ்தவ மக்களின் ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் இன்று (04.04.2021) காலை 7.30 மணியளவில் விசேட பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன.

ஜேசு கிறிஸ்து உயிர்த்ததை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு வவுனியா மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்றன.

வவுனியா மாவட்டத்தின புனித ஈஸ்டர் பெருவிழா பிரதான வழிபாட்டு நிகழ்வுகள் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றதுடன் இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர். வவுனியாவிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.