விபத்தில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் படுகாயம்!!

1196

விபத்து..

அம்பாறை – இறக்காமம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தின் சாரதி உட்பட முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததையடுத்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.