பப்ஜி விளையாட்டின்போது 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் : மற்றொரு சிறுவன் கைது!!

1152

இந்தியாவில்..

இந்தியாவில் பப்ஜி கேம் விளையாடியபோது ஏற்பட்ட ச.ண்டையில் சி.றுவன் கொ.லை செ.ய்யப்பட்டுள்ள சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் சனிக்கிழமை மாலை தனது வீட்டில் இருந்து காணாமல் போன அகீஃப் எனும் 13 வயது சி.றுவன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொ.லை செ.ய்யப்பட்டு ச.டலமாக க.ண்டுபிடிக்கப்பட்டான்.

வி.சாரணையில் இந்த கொ.லை.யை செ.ய்தது அவனுடன் பழகும் மற்றோரு சி.றுவன் என்பதும், Pub-G விளையாட்டின்போது அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட ச.ண்டையில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது என அறிந்த பொலிஸார் அ.திர்ச்சி அடைந்தனர்.

பொலிஸின் தகவல்களின்படி, அகீஃப் எப்போதும் PUBG கேம்களை விளையாடுவதாய் வழக்கமாக கொண்டுள்ளர். சமீபத்தில் அவனது பக்கத்து வீட்தில் வசிக்கும் சிறுவனுடன் அவரவர் வீடுகளிலிருந்து விளையாடிவந்துள்ளனர்.

எல்லா நேரங்களிலும் விளையாட்டில் அகீஃப் மட்டுமே வெற்றி பெற்று வந்துள்ளான். இந்த நிலையில், பக்கத்து விட்டு சிறுவனுக்கு அகீஃப் சார்பாக வேறு யாராவது விளையாடி ஜெயிக்கவைக்கிறார்களா என்று சந்தேகம் வந்துள்ளது.

வேண்டுமென்றால், தன்னுடன் ஒன்றாக அமர்ந்து விளையாடுமாறு அகீஃப் சவால் விட்டுள்ளார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இரவு இருவரும் ஒன்றாக அமர்ந்து விளையாடியுள்ளனர்.

அந்த நேரத்தில் அகீஃப் விளையாட்டில் தோற்றுவிட்டார். இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அகீஃப் அந்த சிறுவனை நோக்கி ஒரு கல்லை எடுத்து எறிந்துள்ளார்.

இதைக் கண்டு கோபமடைந்த அந்த சிறுவன் அகீப்பை ஒரு கனமான கல்லால் த.லை.யி.ல் தா.க்.கி.யு.ள்.ளா.ர். அப்போது அகீஃப்க்கு பெருமளவில் இரத்தம் வரத் தொடங்கி மயங்கி விழுந்துள்ளார்.

உடனே பீதியடைந்த அந்த சிறுவன், அகீஃபின் உடலை வாழை இலைகள் மற்றும் தேங்காய் மட்டைகளால் மூடி அந்த இடத்திலிருந்து த.ப்.பி ஓ.டிவிட்டான்.

இந்நிலையில், கு.ற்றம் சாட்டப்பட்ட பக்கத்து விட்டு மைனர் சி.றுவனை Ullal பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய பொலிஸ் கமிஷனர் என் சஷி குமார், குழந்தைகளுக்கு மொபைல் போன்களை கொடுக்கும்போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.