வவுனியா- மட்டக்களப்பு தனியார் பஸ் மீது தாக்குதல்!!

314

நேற்று (13.03) காலை மட்டக்களப்பு கல்முனைப் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேரூந்து வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடா்பாக மேலும் தெரிய வருவதாவது,

நேற்று அதிகாலை 4 மணியளவில் மட்டக்களப்பு கல்முனையில் இருந்து வவுனியா நோக்கிப் புறப்பட்ட NB -7202 தனியார் பேரூந்து வவுனியா மூன்றுமுறிப்பை அண்மித்த வேளை வவுனியா இலங்கை போக்குவரத்து சபை ஊழியா்கள் மேற்படி பேரூந்தினை வழிமறித்து பேரூந்து சாரதி மீதும் நடத்துனர் மீதும் தாக்குதல் நடத்தி தனியார் பேரூந்தினையும் சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் சாரதியான எஸ்.வசந்தன்(40), நடத்துனரான எஸ்.கஜமுகன் (35) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை கல்முனையில் இருந்து தனியார் பேரூந்து புறப்பட்ட வேளை இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பேரூந்தும் வவுனியாவை நோக்கிப் புறப்பட்டுள்ளது இவ்விரு பேரூந்துக்களின் நடத்துனர்கள், சாரதிகளுக்கிடையிலே போக்குவரத்து நேரம் விடயமாக முறுகல் நிலை ஏற்பட்டு மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் கைகலப்பு ஏற்பட்டு மீண்டும் வவுனியாவை அண்மித்த வேளை இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளான பேரூந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1 2