வவு­னியாவில் போதை தலைக்கேற நீர்த்தாங்கியில் ஏறி நின்று சத்தமிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்..!

515

Vavuniya  bus stand

வவு­னியா நக­ரி­லுள்ள நீர்த்­தாங்கி மீது மது போதையில் ஏறி நின்று சத்­த­மிட்டுக் கொண்­டி­ருந்­த­தாகக் கூறப்­படும் மாங்­குளம் பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மாங்­குளம் பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த இந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் வவு­னியா நக­ருக்கு வந்து மது­வ­ருந்­திய பின்னர் போதையில் நீர்த்­தாங்கி மீதேறி சத்­த­மிட்டுக் கொண்­டி­ருந்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

ஒரு நபர் நீர்த்­தாங்கி மீதேறி சத்­த­மிட்டுக் கொண்­டி­ருந்­த­தாக வவு­னியா பொலிஸ் பொலிஸ் நிலை­யத்­துக்கு கிடைத்த தக­வ­லின்­படி பொலிஸார் அந்த இடத்­துக்கு விரைந்து மிகச் சிர­மத்­துடன் அந்த நபரை கீழே இறக்கி விசாரணை செய்த போது அவர் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரிய வந்துள்ளது.