வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று!!

4706

கொரோனா..

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (30.05) இரவு வெளியாகின.

அதில் சகாயாமாதாபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கும், கோயில்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், பெரியஉலுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மூன்றுமுறிப்பு பகுதியில் இராணுவ வீரர் ஒருவருக்கும்,

மகாறம்பைக்குளம் பள்ளிவாசல் வீதியில் இருவருக்கும், பெரியகோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், அண்ணாநகர் பகுதியில் ஒருவருக்கும், கோதாண்டார் நொச்சிக்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

சின்னப்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும் என 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.