வவுனியா வைத்தியசாலையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம்!!

2358

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று (02.06.2021) மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் மரணமடைந்துள்ளார். வவுனியா நந்திமித்திரகம பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.