வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

919

விபத்து..

மட்டக்களப்பு நகரில் இரண்டு கார்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நகரின் மணிகூண்டு கோபுர சந்தியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு கார்கள் மோதிக்கொண்ட நிலையில் ஒரு கார் விபத்துக்குள்ளாகிய நிலையில், தடம்புரண்டதனால் அதில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த பகுதிக்குச் சென்ற மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.