கணவன், மனைவி சேர்ந்து செய்த கேவலமான செயல் : விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்!!

4623

தமிழகத்தில்..

தமிழகத்தில் ஆள் இல்லாத வீட்டிற்குள் ஜோடியாக புகுந்த கணவன், மனைவியை, அக்கம் பக்கத்தினர் பிடித்து அடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரபுகுமார் (40). இவருக்கு விமலா(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதால், வழக்கம் நேற்று இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது, இவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஆணும், பெண்ணும் புகுந்து வீட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த பொருட்களை எல்லாம் திருட துவங்கியுள்ளனர்.

ஆள், இல்லாத வீட்டிற்குள் சத்தம் கேட்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக ஓடி வந்து அவர்களை பிடிக்க முற்பட்ட போது, தப்பி ஓடியுள்ளனர்.

அதன் பின், இருவரையும் சுற்றி வளைத்த அப்பகுதியினர், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதையடுத்து, விமலாவிற்கு இது தகவல் தெரிவிக்க, அவர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, பொலிசார் உடனடியாக அங்கு விரைந்துள்ளனர்.

அங்கு சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் திருவள்ளூர் அருகே கடம்பத்தூர், கசவா நல்லாத்தூர் கிராமத்தைச் சார்ந்த கருணாபிரபு (36), அவரது மனைவி சௌமியா (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த பொலிசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.