வவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக திரேஸ்குமார் நியமனம்!!

1963


தி.திரேஸ்குமார்..



வவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக தி.திரேஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன வடக்கின் பிரதம செயலாளராக பதவியேற்றுள்ள நிலையில்,



வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அரச அதிபர் வெற்றிடத்திற்கு மேலதிக அரசாங்க அதிபராக செயற்பட்ட தி.திரேஸ்குமார் பதில் அரச அதிபராக உள்நாட்டு அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.




கடந்த 2003 ஆம் ஆண்டு நிர்வாக சேவைக்கு தெரிவான திரேஸ்குமார் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றிய வேளை 10.02.2016 அன்று முதல் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.