நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீர் மரணம் : பிக் பாஸ் பிரபலம் கண்ணீர்!!

1200

நடிகை நல்லெண்ணெய் சித்ரா..

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை சித்ராவின் திடீர் மரணம்
நம்பவே முடியவில்லை, சில நாள் முன்பு தான் அவரிடம் பேசினேன் என சுரேஷ் சக்ரவர்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வந்த நடிகை நல்லெண்ணெய் சித்ரா இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

அவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி தெருவில் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்த நிலையில் வீட்டில் காலமானார். அவரது இறுதி சடங்குககள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது.

56 வயதாகும் சித்ரா கடந்த மே 21ம் தேதி அவர் பிறந்தநாளை கொண்டாடினார். “21-ம் நூற்றாண்டு, வருஷமும் 21, நாளும் மே 21” என அவருக்கு சிலர் வாழ்த்து கூறினார்களாம். தற்போது ஆகஸ்ட் 21ம் தேதி அவர் மரணமடைந்து உள்ளார்.

சித்ராவின் மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி சித்ராவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

“RIP சித்ரா அம்மா. அதிகம் அதிர்ச்சி ஆனேன். நம்பவே முடியவில்லை. சில தினங்களுக்கு முன்பு தானே உங்களிடம் பேசினனே” என உருக்கமாக அவர் பதிவிட்டு உள்ளார். பிரபல நடிகை ரேகாவும் கமெண்டில் “So sad” என பதிவிட்டு உள்ளார்.