உலக சாதனை படைத்துள்ள இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் : நாட்டிற்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம்!!

1914


தினேஷ் பிரியந்த ஹேரத்..



டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார்.



இதற்கமைய F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்துள்ளார். இந்த தூரமானது உலக சாதனை புத்தகத்தில் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




இதேவேளை இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத்தால் இம்முறை இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.