“இந்த மூஞ்சை எப்படி TVல பாக்குறது” : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கண்ணீர் பேட்டி!!

2356


தீபிகா…



பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை தீபிகா அளித்த பிரத்தியேக பேட்டியில் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் ரசிகர்கள் பலரும் “இந்த மூஞ்ச பாரு.. இந்த மூஞ்ச எப்படிடா டிவில பாக்குறது?” என்று பேசியதாகவும்,



கல்லூரி பெண்ணாக நடிக்கும் தன் கேரக்டருக்கு திருமணம் நடப்பது போல் கதை அமைந்ததால் இன்னும் விமர்சனங்கள் வந்தபடி இருந்ததாகவும் தீபிகா குறிப்பிட்டுள்ளார்.




மேலும், பலரும் தன் வெளித்தோற்றத்தை சொல்லி, சொல்லி “நாம நல்லா இல்லயோ” என்கிற உணர்வு வந்ததாகவும் பின்னர் அதனை கடந்துவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


பின்னர் தொடர்ந்து மேக்-அப் இல்லாத போட்டோக்களை போஸ்ட்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்ததாகவும் தற்போது பலரும் தன்னுடைய தன்னம்பிக்கையை ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளர்.

மேலும் பல்வேறு ஆடிஷன்களை கொடுத்து வந்தபோதுதான், தனக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆடிஷன் வந்ததாகவும், தொடர்ந்து கண்ணனுக்கு (பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரம்) ஜோடியாக நடிக்கும் கேரக்டர் மாற்றப்பட்டே வந்ததால், பயமாக இருந்ததாகவும் கண்ணனை கிண்டல் செய்ததாகவும் ஜாலியாக கூறுகிறார்.


இதனிடையே டஇந்த சீரியலில் தீபிகா மாற்றப்பட்டு சாய் காயத்ரி நடிக்கத் தொடங்கியுள்ளார். ஆனாலும் சாய் காயத்ரி தீபிகாவை குறிப்பிட்டு பாசிடிவான பதிவை பகிர்ந்துள்ளார்.

இதற்கு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ள தீபிகா, தன் அம்மா, அப்பா குறித்த நெகிழ்வான விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். தீபிகா பேசும் முழு வீடியோவையும் இணைப்பில் காணலாம்.