வவுனியாவில் த.னிமைப்படுத்தப்பட்ட இருவர் உட்பட 42 பேருக்கு கொரோனா தொற்று!!

1212

கொரோனா..

வவுனியாவில் ஆலயத்தில் ஒன்று கூடியமையால் த.னிமைப்படுத்தப்பட்ட இருவர் உட்பட மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இ.னங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வை.த்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் த.னிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் ப.ரிசோதனையின் முடிவுகள் சில இன்று (08.10) வெளியாகின.

அதில் வவுனியா, தோணிக்கல் சிவன் கோவிலில் சுகாதார வி.திமுறைகளை மீ.றி ஒ.ன்றுகூடியமை தொடர்பில் த.னிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர் உட்பட மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை த.னிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, நாட்டின் மு.டக்கநிலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் மீண்டும் தொ.ற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.