பிள்ளைகளை எப்படி வளர்க்கப் போகின்றேன் என்று தெரியவில்லை : கணவரை இழந்து தவிக்கும் இலங்கை தமிழ்ப்பெண்!!

1677


தமிழகத்தில்..



தமிழகத்தில் லொறி மோதி இலங்கை தமிழர் உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் அவர் மனைவி பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளதோடு போராட்டத்திலும் இறங்கியுள்ளார்.



திருநெல்வேலி மாவட்டம் சமூகரங்கபுரம் கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் தயானந்த். தயானந்த் சில தினங்களுக்கு முன்னர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவர் மீது லொறி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.




தயானந்த் மரணத்துக்கு காரணமான ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை தேவை என கூறி அவர் மனைவி அனுஷா பொலிஸ் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் விசாரித்தனர்.


இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய லொறி ஓட்டுநர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதால், பொலிசார் அந்த ஓட்டுநருக்கு பதிலாக வேறொரு நபரை வழக்கில் சேர்த்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதையடுத்து தயானந்த் மீது லொறி மோதிய சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இலங்கைத் தமிழரான அனுஷா தன் குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் செய்தார்.


அனுஷா கூறுகையில், என் கணவர் சம்பாதித்த வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தி வந்தோம். இனி அவர் இல்லாமல் என் பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறேன் என தெரியவில்லை.

என் குழந்தைகள் கல்விக்கு அரசு உதவி செய்யணும். இந்த வழக்கு தொடர்பாக எங்களுக்கு மிரட்டல் வருகிறது. ஒரு லட்சம் பணம் தருகிறோம், இந்த வழக்கில் இருந்து ஒதுங்குமாறு சொல்கிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார். பொலிசார் கூறுகையில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சரியான நபர்கள் மீது தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.