பிரேசிலில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் பலி..!

576

பிரேசிலில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற இந்நிலையில் கடந்த திங்களன்று மாலை பவேலா நகரில் அமைதிப்பேரணி நடந்தது.

இதில் கலந்து சென்ற திருட்டு – போதைப்பொருள் கும்பல் ஒன்று இறுதியில் வழியில் இருந்த கடைகள், வழிப்போக்கர்கள், போராட்டக்காரர்களிடம் வன்முறையில் ஈடுபட்டு கொள்ளையடித்தது.

செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவேலா பொலிசார் கொள்ளை கும்பலை துரத்தியது. அப்போது, வழியில் தடையை ஏற்படுத்திய அந்த கும்பல் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. பின்னர் இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் ஒரு பொலிசார், ஒரு வழிப்போக்கர் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மற்ற 7 பேர் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த பாவேலா நகரில் போதைப்பொருள் கும்பல் நடமாட்டம் அதிகம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.