இலங்கையில் கட்டிப்பிடிக்க விதிக்கப்பட்ட தடை!!

1592

கட்டிப்பிடிக்க விதிக்கப்பட்ட தடை..

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் நாளைய தினம் பணிகளுக்காக செல்லவுள்ளவர்களுக்கு சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாளைய தினம் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில்,

யாரையும் கட்டிபிடிக்க வேண்டாம் என சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் பரவல் மிகவும் வேகமாக பரவும் என்பதனால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலுவலக பணிக்காக செல்லும் போது வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்டிபிடிப்பது கைகுலுக்குவது போன்ற விடயங்கள் மேற்கொள்ளும் போது வைரஸ் மிகவும் வேகமாக பரவும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.