வாகன விபத்தில் ஐவர் படுகாயம்!!

1040

விபத்து..

மட்டக்களப்பு – கிரான்குளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் இன்று(04.01.2022) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாகன விபத்தில் 5பேர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் கிராமத்திலிருந்து குடும்ப உறவினர்கள் ஒன்றிணைந்து நேற்றையதினம்(03.01) திருகோணமலைக்குச் சுற்றுலா சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கையில்,

கிரான்குளம் பிரதான வீதியில் வைத்து அதிகாலை வேளையில் வேன் பாதையை விட்டு விலகி இலங்கை மின்சாரசபை மின்கம்பத்தில் மோதுண்டு இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் வேன் மற்றும் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இவ்விபத்து சம்பந்தமாக காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.