வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தினை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!!

2133


போராட்டம்..



வவுனியா ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தின் வாயில் முன்பாக இன்று (05.01.2022) காலை 09.45 மணியளவில் பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



பாடசாலைக்கு ஆளுமைமிக்க அதிபரை நியக்குமாறு கோரிக்கை விடுத்து பாடசாலையின் வாயில் முன்பாக அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.




போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கல்வி திணைக்களமே அரசியல்வாதிகளின் கருத்துக்களுக்கு அடிபணியாதே , கல்வி திணைக்களமே ஆளுமைமிக்க அதிபரே எமக்கு வேண்டும் , எமது பாடசாலையின் தரத்தினை குறைக்காதே , கிராமப்புற பாடசாலைகளின் வளர்ச்சியினை தடுக்காதே போன்ற பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.


குறித்த போராட்டத்தில் பொதுமக்கள் , பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் என 50க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் 50 நிமிடங்கள் போராட்டம் இடம்பெற்றிருந்தது.