மீண்டும் அதிகரிக்கப்பட்ட விலை : இலங்கை மக்களின் தலையில் எகிறும் சுமை!!

1677

மீண்டும் அதிகரிக்கப்பட்ட விலை..

இலங்கையில் மீண்டும் அரிசியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபா வரையிலும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 190 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளார். வழமையாக ஜனவரி மாதத்தில், குறித்த ஆண்டுக்கான பெரும்போக அரிசி சந்தைக்கு கிடைக்கும்.

ஆனால், உரப் பிரச்சினை காரணமாக இந்த முறை போதியளவான அரிசி சந்தைக்கு கிடைக்கப்பெறவில்லை என சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு பாரிய நெருக்கடிக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.