மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

1322

விருதுநகர்..

விருதுநகர் ஏன்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவில் வசித்து வரும் தம்பதி கண்ணன் – கற்பகம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், கண்ணன் திருமங்கலத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

மனைவி கற்பகம் வீட்டில் இருந்து வருகிறார். இந்த சூழலில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த கண்ணன் கற்பகத்தை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே கற்பகம் உயிரிழந்தார்.

இதையடுத்து கண்ணன் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊரக காவல் துறையினர் உயிரிழந்த கற்பகத்தின் உடலை,

மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.