மீண்டும் இலங்கையில் ஆபத்து ஏற்படும் அறிகுறிகள் : கடுமையான எச்சரிக்கை!!

926

கொவிட் அலை..

இலங்கையில் மீண்டும் கொவிட் அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போதே தேசிய தொற்றுநோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு வாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை, சற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் கொவிட் அலை ஏற்படக்கூடும் என்ற ஐயம் நிலவுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் ஒமிக்ரோன் திரிபுடனான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒமைக்ரோன் திரிபானது மிக இலகுவாக பரவக்கூடியது.

அறிகுறிகள் குறைந்துள்ள போதிலும், பெரும்பாலானோருக்கு அந்த திரிபு தொற்றக்கூடும் என தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.