கனடாவில் தேடப்படும் தமிழ் யுவதி : பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்!!

2075

பிரசாந்தி அர்ச்சுனன்..

கனடாவில் காணாமல் போன தமிழ் யுவதி ஒருவரை கண்டறிய டொராண்டோ பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கடைசியாக ஜனவரி 16, 2022 அன்று இரவு 7:45 மணிக்கு ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் காணப்பட்டார். இது குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில், காணாமல் போன யுவதி நடுத்தர உடல், பழுப்பு நிற கண்கள், கருப்பு நேரான முடி மற்றும் நடுத்தர நிறம் என விவரிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், யுவதியின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யுவதி குறித்த தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் முறையில் அறிவிக்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.