வவுனியா தரணிக்குளத்தில் பொதுமக்கள் வீதியினை மறித்து போராட்டம்!!

1732


தரணிக்குளத்தில்..



வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தரணிக்குளம் பொதுமக்கள் இன்று (26.02.2022) காலை 11 மணியளவில் தரணிக்குளம் பிரதான வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



2001ம் ஆண்டு தரணிக்குளம் பகுதியில் 1/2 ஏக்கர் காணி வீகிதம் 250 குடும்பத்தினர் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டனர். அதன் பின்னர் அப்பகுதி மக்கள் அவர்களின் வாழ்வதாரத்தினை மேம்படுத்துவதற்காக சட்டவிரோதமான முறையில் 2003ம் ஆண்டு தரணிக்குளம் பிற்பகுதியில் காடாக காணப்பட்ட புதியநகர் பகுதியினை காட்டினை வெட்டி விவசாயம் மேற்கொண்டிருந்ததடன் தற்போது 612 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.




இந்நிலையில் 2014 ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டத்தின் கீழ் பேராறு நீர் வழங்கல், வடிகாலமைப்பு திட்டத்தில் உள்வாக்கப்படும் காணிகளிற்குப் பதிலாக முதலியார்குளத்தில் 15 ஏக்கர் அரச காணியினையும் பத்தியார்குளத்தில் 120 ஏக்கர் அரச காணியினையும்,


கற்குளம் கிராமத்தில் 40 ஏக்கர் அரச காணியினையும் நெற் செய்கைக்காக வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டு பேராறு நீர்த்தேக்கமும் நிர்மானிக்கப்பட்டது.

கற்குளம் கிராமத்தில் 40 ஏக்கர் அரச காணியினை வழங்காது அவர்களை தரணிக்குளம் புதியநகர் பகுதியில் மேட்டுக்காணியில் குடியேற்றுவதற்கு பிரதேச செயலகத்தினர் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.


இதன் காரணமாக அங்கு வசிக்கும் 612 குடும்பத்தினர் பாதிப்படைந்துள்ளனர். அரசாங்கத்தினால் பேராறு நீர்த்தேக்கத்தில் கீழ் வசித்தவர்களுக்கு நெற் செய்கைக்கான காணியே வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள போதிலும்,

தற்போது 612 குடும்பத்தினர் வசிக்கும் மேட்டுக்காணியினை பிரதேச செயலகத்தினர் வழங்க முன்வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தரணிக்குளம் பிரதான வீதியினை வழிமறுத்த பொதுமக்கள் இருப்பதற்கு வீடு காணி இல்லை எமது காணியினைப்பிரித்து இன்னொருவருக்கு வழங்குவது சரியா?, நீங்களே எமது நிலத்தை தந்து விடுங்கள் இல்லையெனில் நாங்கனே அதனை எடுக்க வேண்டி வரும்,

வீடு இல்லை காணி இல்லை 60 ஏக்கர் காணியியை மீட்டுத்தா, 1/2 ஏக்கருக்குள் மீள்குடியேற்றம் செய்யும் பொழுது 250 குடும்பம் இன்று 570 குடும்பம் நாம் எங்கு சென்று வசிப்பது போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தியவன்னம் சுமார் 1 மணிநேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.