வவுனியாவில் நடைபெற்று வரும் வடமாகாண கபடிப் போட்டி முடிவுகள்..!

58

kabadi

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளின் பெரு விளையாட்டு அணிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பெரு விளையாட்டுப்போட்டிகளின் மூன்றாம் கட்டப் போட்டிகள் வருகையில், 15, 19 வயது ஆண்கள் பெண்களுக்கான கபடிப் போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.

15 வயதுப்பிரிவு ஆண்கள் போட்டியில் வடமராட்சி கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி முதலிடத்தைப் பெற்றது. இரண்டாமிடத்தினை இளவாளை சென்.ஹென்றியரசர் கல்லூரி அணியும் மூன்றாமிடத்தினை வவுனியா பரக்குளம் மகா வித்தியாலய அணியும் பெற்றுக்கொண்டன.

15 வயதுப்பிரிவு பெண்கள் போட்டியில் முதலிடத்தினை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உhய்தரப் பாடசாலை அணி பெற்றுக்கொண்டது. இரண்டாமிடத்தினை கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியும், மூன்றாமிடத்தினை மன்னார் கருங்கண்டல றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணியும் பெற்றுக்கொண்டன.

19 வயதுப்பிரிவு ஆண்கள் போட்டியில் வவுனியா பரக்குளம் மகா வித்தியாலய அணி சம்பியனாகியது. இரண்டாமிடத்தினை கிளநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியும், மூன்றாமிடத்தினை இளவாளை சென்.ஹென்றியரசர் கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.

19 வயதுப்பிரிவு பெண்கள் போட்டியில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலய அணி முதலிடத்தினையும், இரண்டாமிடத்தினை கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியும், மூன்றாமிடத்தினை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியும் பெற்றுக்கொண்டன.