வவுனியாவில் இராணுவ முகாம் அருகே விடுதலைப் புலிகளின் டொலர் எங்கே என கேட்டு சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்!!

2262

ஆர்ப்பாட்டம்…

விடுதலைப் புலிகளின் டொலர் எங்கே எனத் தெரிவித்து வவுனியாவில் இராணுவ முகாம் அருகே சிங்கள மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படை தலைமையகத்தின் அருகில் ஒன்று கூடிய மூன்று முறிப்பு பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்களின் ஏற்பாட்டில் ஏ9 வீதியின் ஒரு வழிப்பாதையினை மறித்து குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது.

இதன் போது ‘விடுதலைப்புலிகளின் டொலர் எங்கே, எங்கள் பணத்தை எங்களிற்கு தாருங்கள், நாங்கள் கேட்பது சாப்பிடுவதற்கு ஆனால் கிடைப்பது உங்களுக்கு, கோ கோம் கோட்டா’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.