வவுனியாவை வந்தடைந்த கோட்டா கோ கமவிற்கு ஆதரவு தெரிவித்து மேற்கொள்ளப்படும் துவிச்சக்கரவண்டிப் பயணம்!!

1631

துவிச்சக்கரவண்டிப் பயணம்..

கோட்டா கோ கம போட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னியில் இருந்து செல்லும் துவிச்சக்கர வண்டி பயணம் இன்று (20.05.2022) மாலை வவுனியாவை வந்து அடைந்தது.

காலி முகத்திடலில் இடம்பெறும் கோட்டா கோ கம போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக 32 வயதுடைய இராசரத்தினம் ஜனகவர்மன் என்பவர் விஸ்வமடுவில் இருந்து காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இன்று (20.05) மாலை வவுனியாவை அடைந்தது. வவுனியாவை அடைந்த அவர், காலை அனுராதபுரம் நோக்கி தனது துவிச்சக்கர வண்டி பயணத்தை குறித்த இளைஞர் ஆரம்பிக்கவுள்ளார்.

கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நாட்டு மக்களின் நலன் கருதியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும், பொருளாதார நெருக்கடியை தீர்க்கக் கோரியும் குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இதன்போது அவர் தெரிவித்தார்.