வவுனியாவில் தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் மக்களுக்கு பகிர்ந்தளிப்பு!!

1687


நிவாரணப் பொதிகள்..



பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப்பொதிகளில் வவுனியா மாவட்டத்திற்கு என பகிர்ந்தளிக்கப்பட்ட 22,550 அரிசிப் பொதிகளும் 750 பால்மா பொதிகளும் கடந்த (02.06.2022) அன்று விசேட புகையிரதம் ஊடாக வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்திருந்தது.



நிவாரணப் பொதிகளை வவுனியா புகையிரத நிலைய அத்தியட்சகர் மாவட்ட செயலக அதிகாரிகளிடம் உத்தியோக பூர்வமாக கையளித்துடன் அதனை மாவட்ட செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று பிரதேச செயலாளர்களிடம் கையளித்தனர்.




வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு கிராம அலுவலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக குறித்த நிவாரணப் பொதிகள் இன்று (04.06.2022) பகிர்ந்தளிப்பட்டன.


வவுனியா பிரதேச செயலக பிரிவுக்கு 12,315 அரிசி, 452 பால்மா பொதிகளும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு 4675 அரிசி மற்றும் 148 பால்மா பொதிகளும்,

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு 3560 அரிசி, 116 பால்மா பொதிகளும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கு 2000 அரிசி, 34 பால்மா பொதிகளும் என பங்கீட்டு முறையில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.