போராட்டம்..
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு முன்பாக எரிபொருள் கோரி இன்று (20.06.2022) காலை 11.30 மணியளவில் பிரதேச சபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம் கடமைக்கு செல்வது செல்வதற்கு எரிபொருள் இன்மையினால் தாம் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவித்த ஊழியர்கள் கள உத்தியோகத்தரை எரிபொருள் தட்டுப்பாடு நிலையில் களப்பணிக்கு பணிக்காதே!,
உத்தியோகத்திரன் உயிரை பறிக்காதே உத்தியோகத்தரின் மனநிலையை வதைக்காதே , எரிபொருளை பெற்றுத்தா இல்லையேன் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி, பெற்றோல் தா! பெற்றோல் தா! அத்தியாவசிய தேவைக்கு பெற்றோல் தா!, அத்தியாவசிய தேவைக்கு இல்லால் செய்!,
பொதுபோக்குவரத்துக்கு ஒழுங்கு செய் , காசு தருவோம் எங்களையும் முன்னுரிமைப்படுத்தி எரிபொருள் வழங்கு போன்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் அமைதியான முறையில் சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.