நாகமணி இருப்பது உண்மையா? அறிவியல் கூறும் உண்மை என்ன?

1323

நாகமணி..

இந்த நாக மணி என்ற பெயரை உங்கள் நண்பர்கள் கூறியோ அல்லது படங்களிலோ கேள்விபட்டிருப்பீர்கள், உண்மையில் நாகமணி என்ற ஒன்று உள்ளதா அது எப்படி உருவாகிறது அதற்கு பின்னால் இருக்கும் கட்டுகதைகளும், அறிவியலும் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.

நாகமணி என்றால் என்ன?
இந்த நாகமணி நம்முடைய இதிகாசங்களிலும் புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நாகமணியானது எப்படி உருவாகிறது என்றால் கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த நாகமானது தன்னுடைய விஷத்தை வெளியே செலுத்தாமல் அப்படியே வைத்திருக்கும் இப்படி இருக்கும் விஷமானது ஒரு கல்லாக மாறும்.

மாறிய அந்த கல்லை நாகமானது கக்கும் இப்படி வரக்கூடிய கல்லைதான் நாகமணி என குறிப்பிடுகிறார்கள். இந்த கல்லானது பார்ப்பதற்கு மிகவும் பிரகாசமாகவும் வைரம் போல் இருக்கும் எனவும் மக்கள் நம்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த நாகமணி வைத்திருப்பவர் பெரும் செல்வந்தர் ஆவார் எனவும் மக்கள் நம்புகின்றனர்.

நாகமணி இருப்பது உண்மையா?

இந்த நாகமணி என்பதை இதுவரை எவரும் கண்டதில்லை அதற்கான புகைப்படங்களும் கிடையாது. அதுபோல் ஒரு நாக பாம்பின் சராசரி ஆயுட்காலம் 25 முதல் 30 ஆண்டுகள் மட்டுமே 100 ஆண்டுகள் பாம்புகள் வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை.

அறிவியல் ரீதியாக நாககல் என்பது ஹாலடை அயனியின் ஆதிக்கம்பெற்ற ஃபுளோரைடு (அ) ஃபுளோரபார் என்ற ஒரு கனிமம் எனலாம் இந்த ஃபுளோரைடு ஆனது அதனை சுற்றி இருக்கூடிய வெப்பத்தை உறிஞ்சி அதற்கேற்றார்போல் ஒளி வீசும் தன்மை கொண்டது.

இதற்கும் நாகமணிக்கும் என்ன சம்மந்தம் என ஒரு கேள்வி எழலாம் பெரும்பாலும் பாம்பு இனங்களில் நாக பாம்புகள் மட்டும்தான் பூச்சி இனங்களை உண்ணக்கூடியது. அப்படி இரவில் ஒளி வீசும் இந்த புளோரபார் ஆனது பூச்சிகளை ஈர்க்கும் அந்த பூச்சிகளை உண்ணுவதற்காக அங்கு நாகங்கள் வரும் இதனை கண்ட மனிதர்கள் நாகங்கள் நாகமணியை உருவாக்குகின்றன என்ற ஒரு கட்டுகதையை உருவாக்கிவிட்டனர்.

நம் இந்து முறைப்படி நாகங்களை நாம் கடவுளாக வழிபடுகிறோம் அதன் வரிசையில் இந்த நாகமணியும் கடவுளின் ஒரு சக்தியாக மனிதர்களால் மாற்றப்பட்டுள்ளது . இந்த நாகமணி என்ற ஒரு கதையை வைத்து பல பேர் மக்களை ஏமாற்றி காசு சம்பாதிக்கின்றனர்.

எனவே எதை செய்தாலும் ஆய்வுகளை மேற்கொள்வது தற்போதைய காலகட்டத்தில் மிக அவசியமாகிறது ஏனெனில் தற்போது இருக்கும் கொள்ளை கும்பல்கள் மக்களின் நம்பிக்கையை வைத்தே கொள்ளையடிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.