வவுனியா பசார் வீதிச் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் இருபிள்ளைகளும் காயம்..!

543

வவுனியா பசார் வீதி, பள்ளிவாசலுக்கு முன்னால் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

நேற்று மாலை (25) வவுனியா கொரவப்பொத்தானை வீதியில் இருந்து பசார் வீதியை நோக்கி திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளை பின்னால் வந்த மோட்டர் சைக்கிள் மோதியதில் தாயும் அவரது இரு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மோட்டர் சைக்கிளை செலுத்திவந்த கணவர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.

பின்னால் வந்து மோதிய மோட்டர் சைக்கிளை செலுத்தி வந்தவர் மது போதையில் வந்ததாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது.

மது போதையில் வந்த இளைஞனை கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

vavu