மனைவியை எரித்துக்கொன்ற கணவனுக்குக்கு நேர்ந்த பரிதாபம்!!

536

உத்தரபிரதேசத்தில்..

ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. லத்திகா (21), தன்யா பன்சால் (17) ஆகியோர் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் வசித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 2016-ம் ஆண்டு நடந்தது. மனோஜ் தனது மனைவி அனு பன்சாலை இரு மகள்கள் கண்முன்னே எரித்து கொன்றார். மனோஜ் தற்கொலைக்கு முயன்றார், ஆனால் மகள்கள் தைரியமாக போராடி உண்மையை உலகறியச் செய்து நீதி பெற்றுள்ளனர்.

குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக பரிசோதித்ததும், அது பெண் குழந்தை என்பதால் கணவன் அனுவுடன் சேர்ந்து ஆறு முறை கருக்கலைப்பு செய்ததும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

ஆண் குழந்தை பிறக்காததற்காக தந்தை மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து தாய் கொடூரமான சித்திரவதைகளை எதிர்கொண்டதாக குழந்தைகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். ஆனால் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக மனோஜ் பொய்யான வாக்குமூலம் அளித்தார்.

சிறுமிகள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் சர்மா கூறுகையில், “ஆறு வருடம், ஒரு மாதம், பதின்மூன்று நாட்கள் காத்திருந்து எங்களுக்கு நீதி கிடைத்தது. ஆறு ஆண்டுகளில், சிறுமிகள் சுமார் 100 முறை தைரியமாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர் என்கிறார் சஞ்சய்.