வவுனியா பொலிஸாரின் மனித நேயமிக்க செயல் : குவியும் பாராட்டுக்கள்!!

1744

பொலிஸ்..

வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் எம்.எச்.ஐீ.சி குமார (9405) வவுனியா நகர பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒருலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியினை வீதியிலிருந்து கண்டெடுத்தார்.

அதன் பின்னர் அதில் இருந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உரிய நபரை அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் இது தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவலை தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து உரியவர் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த கையடக்கத் தொலைபேசியானது ஒப்படைக்கப்பட்டது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கப்பட்டதுடன்,

தற்காலத்தில் இவ்வாறு நடந்து கொண்ட குறித்த பொலிஸ் சார்ஜன்ட் செய்த செயற்பாடு சமூகத்தில் பலரின் மத்தியில் வரவேட்பினை பெற்றுள்ளதுடன் மனிதநேயம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.