கணவரின் சிறுவயது புகைப்படத்தை மாமியார் வீட்டில் பார்த்த மனைவி : காத்திருந்த அதிர்ச்சி!!

2214


கணவரின்..



தனது கணவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை பார்த்த பெண்ணுக்கு, கடும் ஆச்சர்யம் ஒன்று காத்திருந்த சம்பவம், தற்போது இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து வருகிறது.



Ecuador நாட்டைச் சேர்ந்தவர் Ailiz Melina. 26 வயதாகும் இவர், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், Pedro Pablo என்ற தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.




முன்னதாக, Ailiz மாற்றம் Pedro ஆகிய இருவரும் கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயத்தில், ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இருவரும், ஆறு வருடங்கள் காதலித்து வந்த நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமும் செய்து கொண்டனர்.


அப்படி ஒரு சூழ்நிலையில் தான், சமீபத்தில் தனது மாமியார் வீட்டில் இருந்த ஃபோட்டோ ஆல்பம் ஒன்றை Ailiz எடுத்து அதில் இருந்த புகைப்படங்களை பார்த்துள்ளார்.

அப்போது, அவருக்கு கடும் இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு, கணவரின் சிறு வயது புகைப்படம் ஒன்றில், அவரின் பின்னால், தான் நிற்பதைக் கண்டு Ailiz ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போயுள்ளார்.


ஒரு சாலையில் வைத்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கேமராவை பார்த்த படி, Pedro நிற்க, அவரை எதேச்சையாக பார்ப்பது போல் மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு Ailiz பின்னாடி குழந்தையாக நிற்கிறார். இதனைக் கண்டதும் தாங்கள் ஏற்கனவே சேர வேண்டும் என்பதற்காக அப்போதே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றும் Ailiz ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

போட்டோ எடுத்த சமயத்தில் நடந்தது தனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என்றும், நான் அவரை பார்த்ததாக கூட என் அறிவில் இல்லை என்றும் Ailiz கூறுகிறார். “இதனை நாங்கள் அறிந்ததும் அதை எங்களால் நம்பவே முடியவில்லை.

மேலும், சந்தோசம், பயம் என அனைத்து உணர்வுகளும் எங்களுக்கு ஒரு நேரத்தில் வந்தது. சரியாக, அந்த புகைப்பட கலைஞர் நான் Pedro பின்னால் நிற்கும் போது அவரை ஃபோட்டோ பிடித்துள்ளார்” என Ailiz தெரிவித்துள்ளார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் இருவர், பல ஆண்டுகளுக்கு பின்னர் காதலித்து திருமணம் செய்து தற்போது சிறப்பாக வாழ்ந்து வரும் சம்பவம், பலரது மத்தியில் நம்ப முடியாத வகையில் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.