வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வு-2022

3532


வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வு நேற்று 11.08.2022 (வியாழக்கிழமை) பள்ளியின் முதல்வர் திரு.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது.



முன்பள்ளியின்  ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வில் திருமதி.கார்த்திகா (முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர்- வவுனியா மாவட்டம்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வுகளை  சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.



மேற்படி நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு சந்தையில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் கழிவுப்பொருள்களைக் கொண்டு  உருவாக்கப்பட்ட கற்றல் கற்பித்தல் சாதனங்கள் மற்றும்  உபகரணங்கள்  ஆகியனவும் கண்காட்சி வளாகத்தை அலங்கரித்தமை குறிப்பிடத்தக்கது.