சிரிப்பூட்டும் வாயுவை சுவாசித்த சிறுமி மரணம் : தடை செய்ய போராடும் குடும்பம்!!

255

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் பார்ட்டியில் சிரிப்பூட்டும் வாயுவை சுவாசித்த 16 வயது சிறுமி உயிரிழந்தார். இதை தடை செய்ய வேண்டும் என அவரது சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு பார்ட்டியில் தனது 16 வயது சகோதரி சிரிப்பூட்டும் வாயுவை (laughing gas) சுவாசித்தால் இறந்ததையடுத்து, மனம் உடைந்த பெண் ஒருவர் சிரிப்பூட்டும் வாயுவை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மெர்சிசைடில் உள்ள ஹேல்வுட் நகரத்தைச் சேர்ந்த Kayleigh Burns எனும் சிறுமி, நைட்ரஸ் ஆக்சைடை உட்கொண்ட சில நிமிடங்களில் சரிந்து விழுந்தார். அவர் வார்விக்ஷயரில் உள்ள லீமிங்டன் ஸ்பாவில் ஒரு வீட்டில் பார்ட்டியில் இருந்தார்.

அவரது சகோதரி Clare Baker (31), முதலில் ஹேல்வுட், Merseyside பகுதியைச் சேர்ந்த கெய்லீயின் நண்பர் ஒருவரிடமிருந்து, அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஒரு செய்தியைப் பெற்றதாக கூறினார். பின்னர் என்ன நடக்கிறது என்பதை அறிய மருத்துவமனைகளைச் சுற்றி அலைந்தாள்.

ஆனால், கெய்லீ இறந்துவிட்டதாக மெர்சிசைட் காவல்துறை அதிகாரிகள் பின்னர் அவரது வீட்டிற்கு வந்தனர். கெய்லீயின் 17-வது பிறந்தநாளுக்கு சில வாரங்கள் இருந்தது என்று அவர் கூறினார்.

நார்த் லிவர்பூலைச் சேர்ந்த கிளேர் “என் சகோதரிக்கு வயது 16, கிட்டத்தட்ட 17 ஆகவிருந்தது, அவள் எப்போதும் மிகவும் அற்புதமான சிறுமி. எங்களுக்குள் இருந்த பந்தத்தை என்னால் விவரிக்கவே முடியாது. கெய்லி வளர்ந்து நல்ல குழந்தைப் பருவத்தைக் கொண்டிருந்தாள், அவள் ஒரு அன்பான குடும்பத்தில் இருந்தாள். அவள் வளர வளர, தவறான நபர்களுடன் பழகினாள்.

அவள் மேக்-அப் மற்றும் ஃபேஷனில் ஆர்வமாக இருந்தாள், மேலும் உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்பினாள். அவள் ஒரு விமானப் பணிப்பெண்ணாக இருக்க விரும்பினாள் அல்லது கப்பல் பயணத்தில் வேலை செய்ய விரும்பினாள், அவளுடைய வாழ்க்கை அவளிடமிருந்து பறிக்கப்பட்டது” என்றார்.

லீமிங்டன் ஸ்பாவுக்குச் செல்வதற்கு முன், கெய்லி தனது தோழியுடன் வாழ கோவென்ட்ரிக்கு சென்றதாக கிளேர் கூறினார். ஜூன் மாதம், இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் தனது குடும்பத்தைப் பார்க்க வந்திருந்தார்.

வீட்டில் பார்ட்டியில் இருந்தவர்கள், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கெய்லீ நைட்ரஸ் ஆக்சைடை சுவாசிக்கும் வீடியோக்களை அனுப்பினர். அதே இரவின் பிற்பகுதியில் அவள் சரிந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு “மிகவும் சூடாக” உணர்த்துவதாக கூறியுள்ளார். அதன்பிறகு மருத்துவனையில் அவர் இறந்தார்.

இந்நிலையில், நைட்ரஸ் ஆக்சைட்டின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர், மேலும் இந்த மருந்தை தடை செய்ய வேண்டும் அல்லது அதற்கு வயது வரம்பை சேர்க்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.