பணம் கையளிப்பு..
குழந்தையின் உயிர்காக்க விசேட அதிரடிப்படையினரால் பொலிஸார் ஒருவரிடம் ஒரு தொகைப்பணம் கையளிக்கப்பட்டது. வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனுராத பஸ்நாயக எனும் பொலிஸாரின்,
ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் மருத்துவச்செலவுக்கு ஒருகோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய் வரை பணம் தேவைப்பட்ட நிலையில்,
விசேட அதிரடிப்படையினரால் இலங்கை ரீதியாக அதிரடிப்படையினரிடம் திரட்டப்பட்ட ஒரு தொகைப் பணத்தை இன்றைய தினம் வவுனியா பொஸில் நிலையத்தில், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் விசேட அதிரடிப்படை அதிகாரியினால் கையளிக்கப்பட்டது.