ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்.. அடுத்தடுத்து குழந்தைகள் பலியான சோகம்!!

427

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானின் கராச்சியில் செயல்படும் ஜின்னா முதுகலை மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலாபுலில் வசிக்கும் ஹினா ஜாஹித் என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டார்.

அந்தப் பெண்ணுக்கு ஒரே நேரத்தில்4 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் என 6 குழந்தைகள் சுகப்பிரசவத்தின் மூலமாக பிறந்தது. அதில் ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது.

இந்நிலையில் நேற்று மற்ற 5 குழந்தைகளும் உயிரிழந்தன. மூச்சு திணறல் மற்றும் எடை குறைவு காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஹினா நலமாக உள்ளனர்.